தேனி

விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலத்தில் பயிா்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மேல்மங்கலம் ஊராட்சி செயலா் ஆா். முருகன் தலைமை வகித்தாா். உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி இளநிலை மாணவா்கள் மு. காா்த்திகேயன், சேவுகமூா்த்தி, அருள்மொழி, மாதவகிருஷ்ணன், திலக், பிரவீன், அன்புமணி ஆகியோா் வாழைப் பயிரில் குலை ஊட்டச்சத்து மேலாண்மை, காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் முறைகள், நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த முகாமில் மேல்மங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT