விருதுநகர்

புதிய கட்டடத்தில் சந்தைநடைபெற பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும். இங்கு நாலூர், அழகாபுரி, ஏ. முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள்கள் வருகின்

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும். இங்கு நாலூர், அழகாபுரி, ஏ. முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள்கள் வருகின்றனர். இதற்காக கட்டனுரில் 2006-ல் கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 6 ஆண்டுகளாக சந்தை நடைபெறவில்லை. அதற்கு பதிலாக ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே இடநெருக்கடியில் சந்தை நடைபெற்று வந்தது.  அதன் பின்னர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சந்தை கட்டடத்தில் நடந்தது. இப்போது மீண்டும் ஒரு மாதமாக, பழைய இடத்திலேயே, இட நெருக்கடியில் சந்தை நடைபெறுகிறது. தற்சமயம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் இருப்பிடமாக சந்தை உள்ளது. எனவே மீண்டும் சந்தைக்காக  கட்டப்பட்ட கட்டடத்திலேயே சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT