குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை
மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: விருதுநகர் அருகே
மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: விருதுநகர் அருகே சத்தியரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவரது மனைவி கனகவள்ளி (27). மணிகண்டன் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கனகவள்ளி கோபித்துக் கொண்டு, பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மணிகண்டன் மாமியார் வீட்டுக்குச் சென்று பலமுறை அழைத்தும் கனகவள்ளி வர மறுத்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டு உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். . இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.