விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூர் சுந்தரம் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி நந்தினிபூஜா 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி 100 சதவீதம் ஆகும். மாநில அளவில் 3ஆவது இடம் பெற்ற மாணவி நந்தினிபூஜாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மீனாட்சி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.