விருதுநகர்

அரசு அதிகாரிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கோரிக்கை

தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

கல்யாணி வெங்கடராமன்

தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க கூட்டம் மல்லாங்கிணறில் தலைவர் ஆ.காமராஜ் தலைமையில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரசோழன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், அரசு உயர்அதிகாரிகள், நீதிபதிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். உயர் அதிகாரிகள் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக ரூ.5 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மேலும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் பிலிப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT