விருதுநகர்

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

DIN

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
விருதுநகர் பாலன் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (50). இவர், தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரூபி ஸ்டெல்லா மேரி (42), பேராலி பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.
இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர், மாலையில் இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த நான்கரை பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, காவல் துறை மோப்ப நாயை சம்பவ இடத்துக்கு கொண்டு வந்தனர். மோப்ப நாய் ரயில் நிலையம் வரை ஓடி நின்றது. மேலும், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT