விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே போலி மருத்துவர் கைது

DIN

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி மருத்துவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சுரைக்காய்பட்டியில் ராஜேந்திரன் (42) என்பவர், மருத்துவம் படிக்காமல் ஆங்கில முறையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டும், மருந்துகள் வழங்கியும் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்து, விருதுநகரில் உள்ள மருத்துவத் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
அதனடிப்படையில், சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, ராஜேந்திரன் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமலேயே  கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து, அவரைக் கைது செய்து,  மருத்துவம் பார்க்க பயன்படுத்திய உபகரணங்கள், மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT