ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் அய்யனாபுரத்தில், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100 பேர், வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், தேமுதிக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் லட்சுமணன், அய்யனாபுரம் பிரமுகர் குமார் மற்றும் 20 பெண்கள் என 100 பேர் திமுகவில் இணைந்தனர். இவர்கள் அனைவருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் பொன்னாடை போர்த்தினார்.
இதில், ஒன்றியச் செயலர் தங்கச்சாமி, நகரச் செயலர் ராமமூர்த்தி, கிழக்கு ஒன்றியத் துணைச் செயலர் பாலவிநாயகம், ஒன்றியப் பொருளாளர் அடைக்கலம், மாவட்டப் பிரதிநிதி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.