ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், அடையாளைம் தெரியாத பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ராஜபாளையம்-தென்காசி பிரதான சாலையில் கோதண்டராமர் கோயில் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது, அச்சாலையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
உடனே, அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த அப்பெண்ணை, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராஜபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான சேத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரைக் கைது செய்தனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.