விருதுநகர்

அண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

DIN


முன்னாள் முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் நடைபெற்ற மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் நெய்னார் முகமது, முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டிபிஎஸ் வெங்கடேஷ் மற்றும் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ரவி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத்தமிழன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏஆர்ஆர் சீனிவாசன் தலைமையில் கேவிஎஸ் நடுநிலைப் பள்ளி அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில்: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தேரடி திடலில் இருந்து அக்கட்சியினர் ஏராளமானோர் பேரணியாக பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அங்குள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ மு.சந்திரபிரபா முத்தையா உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், பா.அங்குராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுகவினர் நகரச் செயலாளர் வழக்குரைஞர் ஜி.ஜி.அய்யாவுபாண்டியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.செல்வமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் த.ரவி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் ஏராளமான தொண்டர்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் தலைமையில், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் முன்னிலையில் பேரணியாக பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், மாவட்ட சிறுபான்மை அணியின் இணைச் செயலாளர் பிரின்ஸ், மாவட்ட மகளிர் அணி கவிதா, சிந்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தூரில்: சாத்தூரில் அமமுக சார்பில் நகர செயலாளர் ஜீ.ஆர்.முருகன், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகப் பொருளாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மாரியாதை செலுத்தப்பட்டது. இதில், நகர அம்மா பேரவை செயலாளர் வேல் சோலைராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.டி.முனீஸ்வரன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நகர் காவல் நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் சாத்தூர் நகர செயலாளர் வாசன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி உள்பட ஏராளமானோர் அண்ணாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் சாத்தூர் வடக்கு ரத வீதி பகுதியில் நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர் சரவணன், முருகேசன் ஆகியோர் அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT