விருதுநகர் சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதார துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவதில் பராபட்சம் காட்டும் போக்கினை சுட்டிக் காட்டி, சங்கம் வாயிலாக அளித்த கடிதத்திற்கு, பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணனுக்கு குற்ற குறிப்பாணை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். சங்கத்தின் ஜனநாயக நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் சுகாதார துறை இணைச் செயலாளருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் கடந்த 7-5-2013 அன்று வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.