விருதுநகர்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி, விருதுநகரில் நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
      விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் சட்டப்பேரவை பொறுப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 7 பேர் நீதிமன்றம் விதித்த தண்டனைக் காலத்தை கடந்துவிட்டனர். இந்நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும்,  7 பேர் விடுதலை தொடர்பாக காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த 7 பேரை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கமிட்டனர்.
    ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 60 பேர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT