விருதுநகர்

ஜேசிபி ஓட்டுநர் மீது தாக்குதல் அதிமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு

DIN

ராஜபாளையம் அருகே ஜே.சி.பி. வாகன ஓட்டுநர் உள்பட மூன்று பேரைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
   ராஜபாளையம் அருகேயுள்ள புத்தூரைச் சேர்ந்த குருச்சந்திரன் மகன் தங்கவேல்(45). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும்  தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், செட்டியார்பட்டி பேரூர் அதிமுக நகரச் செயலாளர் அங்குதுரை, ஜே.சி.பி. வாகனத்தை கண்மாயில் மண் அள்ளுவதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார். இயந்திரத்திற்கான வாடகை பணமாக ரூ.8800 கேட்டதற்கு அங்குதுரை ரூ.5ஆயிரம் மட்டும் கொடுத்தாராம்.  அதை தங்கவேல் வாங்க மறுத்ததால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இரவில் அங்குதுரை தனது நண்பர்களுடன் கும்பலாக சென்று செங்கள் சூளையில் நிறுத்தப்பட்டிருந்த ஜே.சி.பி.வாகனம், பேருந்து, இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை அடித்து சேதப்படுத்தினாராம். இதனை தடுக்க சென்ற தங்கவேல், அவரது சகோதரர் அய்யப்பன் மற்றும் அங்கு பணிபுரிந்த குமார் ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்த சென்றுவிட்டார்களாம். சம்பவம் குறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணன், அங்குதுரை  மற்றும் அவரது நண்பர்கள்  கிருஷ்ணன், அருண், காளி, ராமமூர்த்தி, பாஸ்கரன்,செந்தட்டிகாளைப்பாண்டியன், கண்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT