விருதுநகர்

பெரியநாயகிபுரத்தில்  கூடுதல் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க வலியுறுத்தல்

DIN

அருப்புக்கோட்டை வட்டம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் மின்மோட்டாருடன் கூடிய கூடுதல் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் வழியில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரியநாயகிபுரம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 1200 பேர் வசிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தின் நுழைவுப்பகுதியில் உள்ள பிரதான வீதியில் மட்டும் பொதுமக்களின் வீட்டுப்புழக்கத்துக்காக  மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.  இந்த மோட்டாரானது அப்பகுதியில் உள்ள சுமார் 20 வீடுகளுக்கு மட்டுமே போதுமான நீரைத் தரக்கூடிய திறன்கொண்டதாக இருக்கிறது. 
இதனால் கிராமத்தின் பிற வீதிகளைச் சேர்ந்தோர் வெகுதூரம் சென்று  ஊருக்கு வெளியில் அமைந்துள்ள கிணற்று நீரையே குடங்கள் மூலம் வீட்டுக்கு எடுத்து வருகின்றனர். இதனால் பெண்கள் அலைச்சலுக்கும் அவதிக்கும் ஆளாகின்றனர். எனவே இக்கிராமத்தின் பிற வீதிகளில் உள்ள  பொதுமக்களின் தேவைப்படி மேற்கொண்டு 4 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டுமென  ஊராட்சி அலுவலகத்திலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்திலும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தும்  உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
எனவே பெரியநாயகிபுரம் கிராமத்தில் மின்மோட்டாருடன் கூடிய கூடுதல் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துத் தரவேண்டுமென மீண்டும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT