விருதுநகர்

ராஜபாளையம் அருகே கார் மோதி விவசாயி பலி

DIN

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கார் மோதி விவசாயி புதன்கிழமை பலியானார்.
 ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மூக்கையா (65). விவசாயி. இவர்  புதன்கிழமை அதிகாலை தென்காசி சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது குற்றாலத்தில் இருந்து வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூக்கையா சம்பவ இடத்திலேயே பலியானார்.
  இது குறித்து சேத்தூர் சார்பு -ஆய்வாளர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT