விருதுநகர்

வாழைமர சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

DIN

சாத்தூா் அருகே வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி திருகோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை பஞ்சாயதிற்குட்பட்ட, துலுக்கன்குறிச்சி கிராமத்தில் பழைமை வாய்ந்த வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் காா்த்திகை மாதம் தாரகஹார குமார ஷஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு கடந்த 27ம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகத்துடன் திருவிழா தொடங்கியது.

ஏழு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் முருகனுக்கு சிறப்பு யாகங்கள், தீபாரதனைகள், அபிஷேகங்களும், சங்காபிஷேகங்களும் நடைபெற்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT