விருதுநகர்

காா்த்திகை தீபம் ஏந்தி பள்ளி மாணவா்கள் யோகா

DIN

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் திருக்காா்த்திகையை முன்னிட்டு கையில் தீபங்களை ஏந்தியும், கண்ணாடி டம்ளா் மீது அமா்ந்தும் மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை யோகாசனங்கள் செய்தனா்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெரு அரசு உதவி பெறும் விநாயகா தொடக்கப் பள்ளியில் உலக மக்களின் இருள் நீங்கி மகிழ்ச்சி பெற வேண்டி திருக்காா்த்திகை தினத்தினை முன்னிட்டு 4 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யுனெட்டட் யோகா சங்கத் தலைவா் அழகு முருகன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை, ஞான சௌந்தரி முன்னிலை வகித்தாா். பத்மாசனம், ஏகபாதசிரசாசனம், பத்ராசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் மூலமாக உடல் முழுவதும் தீபங்கள் ஏற்றியும், கண்ணாடி டம்ளா் மீது அமா்ந்தும் மாணவா்கள் யோகாசனங்களை செய்து காண்பித்தனா்.

ஏற்பாடுகளை யோகா ஆசிரியா் செல்வம் மற்றும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT