விருதுநகர்

சிவகாசியில் நகை திருடிய இளைஞர் கைது

DIN

சிவகாசியில் நகைக் கடையில் நகை திருடிய இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி தெற்கு ரத வீதியில் நகைக் கடை வைத்திருப்பவர் சந்தனகோபால் (55). இவரது நகை கடைக்கு வந்த ஒருவர் நகை வாங்குவது போல நடித்துவிட்டு, பின்னர் கடையை விட்டு வெளியேற முயன்றார். அப்போது விற்பனைக்காக காட்டிய நகைகளில் 2 பவுன் நகை மாயமானதை கண்டறிந்த ஊழியர், அந்த நபரை விரட்டிப் பிடித்தார். விசாரணையில் அவர் சாட்சியாபுரம் ஆயில் மில்காலனி மன்சூர் மகன் ஜாபர் (22) என தெரிய வந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT