விருதுநகர்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே  பந்தல்குடியில் வெள்ளிக்கிழமை  நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
பந்தல்குடியில் வசிப்பவர் ஜானகிராமன் மனைவி அலமேலு (60). இவர் வெள்ளிக்கிழமை காலையில் பந்தல்குடி அருகே சேதுராஜபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, சேதுராஜபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அலமேலு அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 
இது தொடர்பாக அலமேலு கொடுத்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT