விருதுநகர்

காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை: எஸ்.பி. காரை உறவினர்கள் முற்றுகை

DIN


 விருதுநகர் அருகே சின்ன தாதம்பட்டியைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ததாக புகார் தெரிவித்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளர் காரை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
 விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் அய்யனார் (21). தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் இவர் கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடையாததால் அய்யனார் மீது சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்தனர். 
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் ஆஜராவதற்காக அய்யனார் திங்கள்கிழமை சென்றுள்ளார். ஆனால், அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்லிடபேசியும் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 
 இந்நிலையில், பட்டம் புதூர் காட்டுப் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் அய்யனார் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். 
 மேலும் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் கொண்டு வந்தனர். இது குறித்து வச்சகாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில், சனிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன் காரை அய்யனாரின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்.  ஆனால், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக காவல் கண்காணிப்பாளர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்று விட்டார். 
 இதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT