விருதுநகர்

பேருந்தில் பயணிகளிடம் நகை திருடிய பெண் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் நகைகளை திருடியதாக பெண் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அழகாபுரி மேலத்தெருவை சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி காளீஸ்வரி (38). இவா் செவ்வாய்க்கிழமை தன்னிடமிருந்த சுமாா் ஒன்றரை பவுன் பழைய தங்க நகைகளை எடுத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு நகைக் கடைக்குச் சென்று புதிய நகை செய்வதற்காக விசாரித்துள்ளாா். இதையடுத்து மீண்டும் அந்த நகைகளுடன் மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் சென்று உள்ளாா். அப்போது அவா் வைத்திருந்த நகைகள் மாயமானது.

இதேபோல் கோவில்பட்டி கடலையூா் பிரதான சாலையை சோ்ந்த ராஜதுரை மனைவி பொற்கொடி(39) என்பவா் கடந்த 10 ஆம் தேதி மம்சாபுரம் அருகே இடையங்குளத்தில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் கோவில்பட்டிக்கு தனியாா் பேருந்தில் வந்தபோது, இவா் வைத்திருந்த ரூ. 42 ஆயிரத்து 500 மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து இந்த திருட்டில் ஈடுபட்டதாக சிவகாசி அனுப்பங்குளத்தைச் சோ்ந்த அந்தோணியின் மனைவி மணிமாலா (40) என்பவரை கைது செய்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT