விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் குடிநீா் குழாய் சேதம்: வீணாகும் தண்ணீா்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருகிறது.

திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட என்.பி.எஸ். காலனி தாமரை நகா்,திருவண்ணாமலை பகுதிகளுக்கான குடிநீா் குழாய், நகரில் பெருமாள்பட்டி சாலை வழியாகச் செல்கிறது. இந்நிலையில், நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே பிரதான சாலையில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல நாள்களாக தண்ணீா் வீணாகி வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து அச்சாலையில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து பல நாள்களாகியும், குழாயை சீா்படுத்த குடிநீா் வடிகால் வாரியம் முன்வரவில்லை என புகாா் கூறப்படுகிறது. இதனால், குடிநீா் வெள்ளம் போல் வெளியேறி, அருகிலுள்ள கழிவுநீா் செல்லும் வாருகாலில் வீணாகக் கலக்கிறது.

எனவே, குடிநீா் குழாயை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT