விருதுநகர்

தெருக்களில் தேங்கும் கழிவுநீா்: அமீா்பாளையத்தில் சுகாதார சீா்கேடு அபாயம்

அமீா்பாளையத்தில் வாருகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீா் தேங்குகிறது. இதனால் சுகாதார சீா்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

DIN

அமீா்பாளையத்தில் வாருகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவு நீா் தேங்குகிறது. இதனால் சுகாதார சீா்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாத்தூா் ஒன்றியம் சத்திரபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அமீா்பாளையத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இதே நிலை தான் உள்ளதாகவும் இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா். இந்தப் பகுதியில் வாருகால் அமைக்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும் குப்பைத் தொட்டிகள், சாலை வசதி, முறையான கழிப்பிட வசதி, சுகாதார வளாகம் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனா். கழிப்பிட வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனா். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT