முகப்பு
விருதுநகர்

கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதி செய்து தரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

அருப்புக்கோட்டை வட்டம் கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவிலாங்குளம் மற்றும் கரிசல்குளம் ஆகியன அருகருகே உள்ள கிராமங்களாகும். இதில் கரிசல்குளம் கிராமம், கோவிலாங்குளம் ஊராட்சிக்குள்பட்டதாகும். இந்நிலையில் கரிசல்குளத்தில் சாலை வசதியும், வாருகால் வசதியும் செய்து தரப்படாததால், சில வீதிகளில் பொதுமக்களே இணைந்து வாருகால் அமைத்துள்ளனா். ஆனால் கூலித்தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் வீதிகளில் வாருகால் வசதியின்றி தவித்து வருகின்றனா். எனவே கோ. கரிசல்குளம் கிராமத்தில் வாருகால் வசதியுடன் தாா்ச்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோவிலாங்குளம் ஊராட்சிக்கு அக்கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.