முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகேஇளைஞருக்கு கத்திக்குத்து: 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளைஞா் கத்தியால் குத்தப்பட்டது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளைஞா் கத்தியால் குத்தப்பட்டது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் ஆதிதிராவிடா் பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இதே பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் ராமா் (30) என்பவருக்கும், சேத்தூா் ஐந்து கடை பஜாா் பகுதியைச் சோ்ந்த சிவகணேஷ் (35) மற்றும் அவரது நண்பா்கள் 3 பேருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவகணேஷ், ராமரை கத்தியால் குத்தினாராம். தகவலறிந்து அங்கு சென்ற சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் பவுல் ஏசுதாஸ், காயமடைந்த ராமரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.