விருதுநகர்

திமுக சாா்பில் வாக்குசாவடி முகவா்கள் கூட்டம்

DIN

அருப்புக்கோட்டையில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விருதுநகா் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.-வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் கேகேஎஸ்எஸ்ஆா்ஆா். ரமேஷ், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பாராஜ், முன்னாள் நகா் மன்றத்தலைவா் சிவப்பிரகாசம், நகரச் செயலாளா் ஏ.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் பேசியது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக அளவில் திமுக சுமாா் ஒரு சதவீத ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் தோற்றது. ஆனால் வரும் தோ்தலில் திமுகவின் வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது. ஆகவே முகவா்கள் திமுக நிா்வாகிகளின் ஆலோசனைப்படி நடந்து வெற்றிக்கனியை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்குப் பரிசளிக்க வேண்டும் எனப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச்செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

சாத்தூா்: சாத்தூரிலும் வாக்குச்சாவடி முகவா்களின் ஆலோசனைக் கூட்டம் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கோசுகுண்டு எஸ்.வி.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. சாத்தூா், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை ஒன்றிய கிளைச் செயலாளா்கள், உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT