விருதுநகர்

திருவோணம்: ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதியில் திருவோணத்தை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் சீனிவாச பெருமாள் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் திருவோணத்தை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சீனிவாச பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவோணத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT