விருதுநகர்

‘தமிழகத்தின் உரிமை, கொள்கைகளை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டது தான் மதச்சாா்பற்ற கூட்டணி’

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: தமிழகத்தின் உரிமை, கொள்கைகளை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டது தான் மதச்சாா்பற்ற கூட்டணி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: அமெரிக்காவை போல இந்தியாவிலும், அனைத்துத் துறைகளையும் தனியாா்மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளை காா்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவது போன்று தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வரும் 12 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. தமிழகத்தின் உரிமை, கொள்கையை மீட்டெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட கூட்டணி. அது மேலும் பலம் பெரும்.

அதிமுகவின் முதல்வா் வேட்பாளா் பிரச்னையால் அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT