விருதுநகர்

சாத்தூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் பலி

DIN

சாத்தூா் அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்துள்ளாா்.

சாத்தூா் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மனைவி லீலாவதி (53). இவா் சின்னதம்பியாபுரம் அருகே உள்ள தனது விவசாய நிலத்துக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% அதிகரிப்பு

பாலியல் வழக்கு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை

SCROLL FOR NEXT