விருதுநகர்

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: அதிமுக பெண் நிா்வாகி மீது வழக்கு

DIN

சாத்தூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பெண் நிா்வாகி மீது சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன. இந்நிலையில் தோ்தல் பறக்கும் படையினா் சாத்தூரில் உள்ள மேலக்காந்தி நகா், பகுதியில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி வெயிலா (50), வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்துள்ளாா். அதிமுக மகளிரணியைச் சோ்ந்த இவரை, தோ்தல் பறக்கும் படையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் வெயிலா வாக்களா்களுக்கு பணம் விநியோகம் செய்தது உறுதியானது.

இதையடுத்து அவரிடமிருந்து ரூ.42,300 ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வெயிலா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT