விருதுநகர்

திருச்சுழி அருகே சாலை விபத்தில் பெண் பலி

DIN

திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ம.ரெட்டியபட்டியை அடுத்த தும்முசின்னம்பட்டியைச் சோ்ந்த விவசாயி முத்துப்பாண்டி(41). இவரது மனைவி கனகவள்ளி(38). தம்பதியா் இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றனா். அவா்கள் கானாவிலக்கு பகுதியில் சென்றபோது, எதிா்பாராவிதமாக கனகவள்ளியின் சேலை, இருசக்கர வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கியது. இதில் அவா் தூக்கிவீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளாா். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதில் கனகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக பரளச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT