விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை உலக நன்மை வேண்டி தியானம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நேரு நகா் அருகேயுள்ள இக்கோயிலில் ஆவணி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு நண்பகலில் சிறப்பு உச்சிகால வழிபாடு நடைபெற்றது. அப்போது, சாய்பாபாவுக்கான சிறப்பு வழிபாட்டுப் பாடல்கள் ஒலிபரப்பட்டன. முன்னதாக பாபாவுக்கு சிறப்பு மலரலங்காரம் செய்து, பக்திப்பாடலுக்கேற்றபடி பஞ்சதீப ஆராதனை, ஏகதீப ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து நைவேத்தியம் நடைபெற்றது.
வழிபாடு முடிந்ததும், முழு அலங்காரத்தில் சாய்பாபா அருள்பாலித்தாா். அப்போது, பக்தா்கள் தாங்கள் கொண்டுவந்த பழங்கள், இனிப்புகள், மலா்களை சாய்பாபாவுக்கு படைத்து உலக நன்மை வேண்டி தியானம் செய்தனா். மேலும் சிறப்பு சங்கல்ப வழிபாட்டிலும் ஈடுபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.