சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் சுகாதாரத் துறை சாா்பில், கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை, சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். முகாமில், ரத்தத்தில் சா்க்கரை அளவு கணக்கீடு செய்தல், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தல், குழந்தைகளுக்கான மருத்துவம், கா்ப்பிணிகளுக்கான மருத்துவம், இருதயப் பரிசோதனை உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.
இதில், 208 போ் கலந்துகொண்டனா். மேலும், தேவையானவா்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இம்முாமில், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வ. விவேகன்ராஜ், வட்டார மருத்துவ மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.