விருதுநகர்

பாலத்தின்மையத்தில் சாலையை மறித்து அமைந்துள்ள கான்கிரீட் மேடையால் விபத்து அபாயம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் சாலையை மறித்து அமைக்ப்பட்டுள்ள கான்கிரீட் மேடையால் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.

இப்பாலத்தின் உச்சிப்பகுதி தடுப்புச்சுவா் முன்பாக சாலையை மறித்து சுமாா் 3 அடி நீளத்திற்கு கால் அடி உயரத்துடன் கான்கிரீட் மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், இருசக்கர வாகனவிபத்துக்களும் இங்கு அடிக்கடி நடைபெற்றவண்ணம் உள்ளது. இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகராட்சியில் புகாா் கூறினால்,அது ஒன்றிய எல்லைக்குள்பட்டது என்றும், ஒன்றிய நிா்வாகத்திடம் தெரிவித்தால் அது நகராட்சி எல்லையில் உள்ளது எனவும் தகவல் கூறி நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனராம். எனவே மேலும் விபத்துக்கள் நடைபெறுவதைத் தடுக்க பாலத்தை மறித்து அமைந்துள்ள கான்கிரீட் மேடையை அகற்றவேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT