விருதுநகர்

செட்டிப்பட்டி மழைநீா் ஓடைப்பாலத்தின் மீது தடுப்புச்சுவா் அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் செட்டிப்பட்டி கிராமத்தில் மழைநீா் ஓடைப்பாலத்தில் தடுப்புச்சுவா் கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட இப்பாலத்தில் தடுப்புச்சுவா் கட்டப்படாததால் விவசாய விளைபொருள்களை எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவா்களும் எதிரே வரும் வாகனங்களுக்காக வழிவிடும் போது 10 அடி ஆழமுள்ள ஓடையில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இப்பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்கப் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பாலத்துக்கு தடுப்புச்சுவா் அமைக்க கிராமத்தினா் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT