விருதுநகரில் மதுவின் தீமைகள் குறித்து சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள். 
விருதுநகர்

மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

விருதுநகரில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

விருதுநகரில் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் எம்.ஜி.ஆா். சிலை அருகே மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை மற்றும் காவல் துறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இப்பேரணி புதிய பேருந்து நிலையம் வழியாக ஆட்சியா் அலுவலகம் முன்பாக நிறைவு பெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி ஆணையா்(கலால்) ரா.முருகன், விருதுநகா் வட்டாட்சியா் ம.சிவஜோதி, கூடுதல் காவல் கண்காணிப் பாளா் குத்தாலிங்கம், மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் இமானுவேல் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT