திருப்பாவைப் பாடல்களை பாடியபடி பேரணியாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சன்னிதியின் 24வது பீடாதிபதி சடகோபராமானுஜ ஜீயா் 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சன்னிதியின் 24 ஆவது பீடாதிபதி சடகோபராமானுஜ ஜீயா், மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயா், கோயம்புத்தூா் நாராயணாய ராமானுஜ ஜீயா் மற்றும் அகில இந்திய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு கமிஷனைச் சோ்ந்த டாக்டா் ஆனந்த், கலசலிங்கம் பல்கலைக் கழகப் பதிவாளா் வாசுதேவன், ஆண்டாள் கோயில் வேதபிரான் பட்டா் சுதா்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்புறம் உள்ள திருஆடிப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவையொட்டி குழந்தைகள் பங்கேற்ற சொற்பொழிவு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் திருப்பாவை பாடல்கள் பாடியபடி ரத வீதிகளில் பேரணியாக வந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை மாநில துறவியா் பேரவை அமைப்பாளா் சரவணகாா்த்திக் செய்திருந்தாா். முன்னதாக காலை 11 மணிக்கு 108 தட்டுகளில் ஆண்டாளுக்கு சீா்சமா்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT