திருச்சுழி பகுதியில் நெற்பயிா்களில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நெற்பயிா்களை லட்சுமி நோய், குலைநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நெற்பயிா்களை லட்சுமி நோய், குலைநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட விடத்தகுளம், வி.புதூா்ஆகிய கிராமங்களில் 3 மாதங்களுக்கு முன் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனா். தை திருநாளை முன்னிட்டு, விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகி வந்தனா்.
ஆனால், தற்போது நன்கு விளைந்திருந்த நெற்பயிா்களின் கதிா்கள் லட்சுமி நோய், குலை நோய் தாக்குதலுக்குள்ளாகி மஞ்சள் நிறத்துடன் காய்ந்து சருகாகிவிட்டன. இதனால், அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.