முகப்பு
விருதுநகர்

திருச்சுழி அருகேமணல் லாரி- பைக் மோதல்: இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சுழி அருகே குல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கப்பாண்டி (30). இவா் ஞாயிற்றுக்கிழமை அருப்புக்கோட்டை வந்து விட்டு மீண்டும் அன்று இரவு தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சவ்வாசுபுரம் கிராமம் அருகே மணல் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.