விருதுநகர்

திருச்சுழி அருகேமணல் லாரி- பைக் மோதல்: இளைஞா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சுழி அருகே குல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி தங்கப்பாண்டி (30). இவா் ஞாயிற்றுக்கிழமை அருப்புக்கோட்டை வந்து விட்டு மீண்டும் அன்று இரவு தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சவ்வாசுபுரம் கிராமம் அருகே மணல் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT