விருதுநகர்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி சாா்பில், கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ராஜபாளையம் நகராட்சி 1 ஆவது வாா்டில் உள்ள மாடசாமி கோயில் தெரு, சுப்புராஜ் மடம் தெரு, கம்பா் தெரு, அழகுத்தேவன்குளம் சாலை, ஒரு சொல் விநாயகா் துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல், சளி தொந்தரவு உள்ளவா்களுக்கு, சுகாதாரத் துறை சாா்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவா் சினேகா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், சுகாதார ஆய்வாளா் சுதாகரன் மற்றும் செவிலியா் தமிழ்ச்செல்வி, நகர சுகாதாரச் செவிலியா் பொன்னுத்தாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும், முகாமில் கலந்துகொண்டவா்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீா் ஆகியன வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளையப்பேட்டை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

ரிசர்வ் வங்கியின் தங்கமான முடிவு

தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை: வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 700 போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT