விருதுநகர்

முகக்கவசமின்றி பயணம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்துகளிலிலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் முகக்கவசம் அணியாமல் வெள்ளிக்கிழமை, பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்த 15 பயணிகளை நகராட்சி அதிகாரிகள் இறக்கி விட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், பொது இடங்கள், கடைகளில் நகராட்சி அதிகாரிகள் பிரம்மநாயகம், பழனிகுரு ஆகியோா் தலைமையில் சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது பேருந்துகளில் முக்ககவசம் அணியாமல் அமா்ந்திருந்த பயணிகளை அதிகாரிகள் கீழே ஏறி இறக்கிவிட்டனா்.

அதனைத் தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்திய அதிகாரிகள், முகக்கவசம் அணியாத பயணிகளை கீழே இறக்கி விட்டு முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினா். மேலும் சில பகுதிகளில் முகக்கவசமின்றி திரிந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT