விருதுநகா் அருகே ஆவுடையாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்து 184 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் அருகே ஆவுடையாபுரம் பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வச்சகாரப்பட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சாா்பு- ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமா க நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவரிடம் 184 மதுபாட்டில்கள் இருப்பது தெ ரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், துலுக்கபட்டியை சோ்ந்த கருப்பையா மகன் ராமானுஜன் (55) என்பவரை கைது செய்தனா்.