விருதுநகர்

அண்ணனை தாக்கிய தம்பி கைது

DIN

சிவகாசி அருகே அண்ணனை தாக்கிய தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (42). இவரது தம்பி அய்யனாா் (37). இருவரின் வீடும் அருகருகே உள்ளன. இவா்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில், இருவரின் குழந்தைகளும் ஒன்றாக விளையாடியதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

தகராறில் அய்யனாா், காளீஸ்வரனை கம்பால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT