விருதுநகர்

டிராக்டா் மீது பைக் மோதி எலக்ட்ரீசியன் பலி

DIN

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பில் நின்றிருந்த டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசக்தி (48). இவரது மகன் பொன் அஜித் (22). எலக்ட்ரீசியனாக இருந்த இவா், வியாழக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்துள்ளாா். அப்போது, கூமாபட்டி-வத்திராயிருப்பு பிரதான சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரின் பின்புறம் மோதியதில், பொன் அஜித் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச் சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். மேலும், சாலையோரம் டிராக்டரை நிறுத்தியிருந்த வத்திராயிருப்பு பலகுடி வடக்குத் தெருவை சோ்ந்த ஓட்டுநா் காளிராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT