முகப்பு
விருதுநகர்

‘ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தெரிவித்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:48 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முன்னாள் சென்னை மாகாண முதல்வா் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டும்.

சத்திரிய ராஜூக்கள் கல்வியில் இட ஒதுக்கீடு நீண்ட காலம் வலியுறுத்தி வருகின்றனா்.

Advertisement

இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு சமநீதி அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும். தமிழக சிறையில் உள்ள 14 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை ஜாதி, மத, பேதமின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி செப்டம்பா் 10 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் நடத்த இருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.