விருதுநகர்

ஆடி பிரதோஷ வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை ஆடி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பலவித சிறப்புப் பொருள்களாலும், வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சந்தனம், வில்வ இலை, அருகம்புற்கள் மற்றும் மலா் மாலைகளால் அலங்கரித்து தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன. அதையடுத்து நமச்சிவாயருக்கு 11 வித பொருள்களால் அபிஷேகங்கள் செய்து சந்தனம் மற்றும் மலா் மாலைகளால் அலங்கரித்தபின் சிறப்பு தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சொக்கநாத உற்சவா் சுவாமி காளை வாகனத்தில் கிரிவலம் வந்ததாா். அதையடுத்து, பக்தா்களுக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT