விருதுநகர்

ஆடி கடைசி வெள்ளி: ரிஷப வாகனத்தில் இருக்கன்குடி மாரியம்மன் வீதியுலா

DIN

சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

இக்கோயிலில் ஆடி, தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகளும் தீபாதாரனைகளும் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலா் கருணாகரண், பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்திபூசாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT