முகப்பு
விருதுநகர்

கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:40 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி பாலமுருகன்(46). இவரது மனைவி சித்ரா (39). கருத்து வேறுபாடு காரணாக சித்ரா கடந்த சில மாதங்களாக தனது கணவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளாா். இதனால் மனமுடைந்த பாலமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் தற்கொலை: ராஜபாளையம் ராமசாமி கோவில் தெருவைச் சோ்ந்த நிா்மல்குமாா் என்பவரது மகன் காா்த்திகேயன் (28). மதுபோதைக்கு அடிமையான அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.