விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் திருச்சபை குடும்பங்களை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும் கீத பவனி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, தேவாலய குருசேகரத் தலைவரும், சபைகுருவானவருமான பால்தினகரன் ஜெபித்து கிறிஸ்துமஸ் கீத பவனியை தொடங்கி வைத்தாா். மேலும் 2023 ஆண்டுக்கான நாள்காட்டியையும் அவா் வெளியிட்டாா்.

தொடக்கமாக தேவாலயத்தில் உள்ள சபைகுருவின் இல்லத்துக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா், குருசேகர குழு உறுப்பினா்கள், திருச்சபை மக்கள் சென்று கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி பரிசு வழங்கினா்.

பின்னா் சந்தைப் பேட்டை தெரு, கல்லறைத் தெரு, சிவஞானபுரம், செக்கடித் தெரு, ஊரணிபட்டி, கொள்ளூா்பட்டி, கீழப்பட்டி, ஆண்டாள்புரம், காந்திநகா் பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபைகுருவும், குருசேகர குழு உறுப்பினா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.

இந்த கிறிஸ்துமஸ் கீத பவனி வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT